"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?
எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.
இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.
அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.
அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.
அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.
என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.
மீண்டும் அந்த வாக்கியங்கள்.
"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
இதில் சொல்லியிருப்பது சரியா?
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?
இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.
எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.
இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.
அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.
அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.
அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.
என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.
மீண்டும் அந்த வாக்கியங்கள்.
"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
இதில் சொல்லியிருப்பது சரியா?
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?
இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.
"தட்டிக்கேட்க ஆளில்லையென்றால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்கிற பழமொழி இந்த இடத்திற்கு நன்கு பொருந்தும் என நினைக்கிறேன். எழுதுவதற்கு ஒரு ஆளும் பிரசுரிக்க ஒரு பத்திரிக்கையும் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம்!
பதிலளிநீக்குசரவணன் - முயலுக்கு மூணு கால் என்றால் நம்புகிறவர்கள் நம்புவாங்க. .... :-)
பதிலளிநீக்குஅட நீங்க என்ன புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அது ஆன்மீகம் அய்யா ஆன்மீகம். சொல்வது குரு நாதர் கேள்வியெல்லாம் கேட்க கூடாது. கம்முன்னு கேட்டுக்கிடனும். குரு சொல்லைத் தட்டாதேன்னு பழ மொழியெல்லாம் இருக்கிறதே தெரியாதா? சில பேர் குரு வழியையே பாலோ செய்து ... ஹீ..ஹீ.. வேண்டாமே விரசமாயிடும்.
பதிலளிநீக்குசாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...
பதிலளிநீக்குi hope he doesn't know this fact.
பதிலளிநீக்குதப்புபண்ணிட்டீங்க... சத்குரு என்னச்சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குஅப்படின்னு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் உங்களுக்கு எதிரா வரும்... நம்மமக்களுக்கு காவிஉடையும், கொஞ்சம்பெருசா தாடியும் வச்சுட்டு யாரு என்னச்சொன்னாலும் நம்ப தயாரா இருக்காங்க்ளே...
உங்களுக்குத் தெரியுமா? இப்போது ஒரு மோடி நம்ம மக்கள் மத்தியில் உலாவுது
பதிலளிநீக்குயாரையாவது பிரபலமாக்குவது
பின் அவர்கள் ஏப்பம் விட்டாலே அதைக் கவிதை என்பது;
கிறுக்குவதை ஓவியம் என்பது;
வெறியில் சறுக்கி விழுந்தாலும் பிறவி நடிப்பு என்பது;
காவிக்கட்டிப் பிசத்துவதைத் தத்துவம் என்பது.
எல்லாவற்றையும் ஏற்கத்தானே நாம் இருக்கிறோம்.
unmai kasakum
பதிலளிநீக்குunmai kasakum neenga feel pannathinga boss
பதிலளிநீக்குநீங்கள் தெளிவாய் தான் இருக்கிறீர்கள்.The so called சாமியார்கள் அணைவரும் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற ஒரு தவறான,மாற்ற முடியாத நம்பிக்கை பெரும்பாலோரிடம் உள்ளது.சாமியார்களுக்கு நன்றாக "கதை" விடவும் "சரடு "
பதிலளிநீக்குவிடவும் எளிதாக வரும். ஜோசியர்களும் ஜாதகம் பார்பவர்களும் கூட இந்த வகையில் அடக்கம்.லாஜிக்குடன் ஒரு கேள்வி கேட்டால் அவ்வளவுதான் அவர்கள் மேலும் அதிகம் கயறு விட ஆரம்பித்துவிடுவார்கள்.
Dr.Kanthaswamy கூறுவது முற்றிலும் சரியே.ஆன்மிகம் என்ற பெயரில் இயற்கையான தாய்மையை யும் கேவலமாக பேசியே தங்களின் "ஞானத்தை" உலகறிய செய்வார்கள். நாமும் இவர்களின் காலில் விழுந்து வணங்குவோம்.
Just ignore those cranky personalities. All are rubbish.